பொன்மொழிகள்

மனதை அடக்கியாள வேண்டும்! – வியாசர்

  • மனம், வாக்கு, உடம்பு இந்த மூன்றையும் எப்போதும் அடக்கியாள கற்றுக் கொள்ள வேண்டும்.
  • புத்தியால் மனதை அடக்கியாள்பவன் வெற்றி இலக்கை எட்டுவது உறுதி.
  • பிறருடைய குற்றங்குறைகளை மன்னிப்பவன் மனிதன். அதே சமயத்தில் பிறர் குறைகளை மறந்துவிடுபவன் தன்னை தெய்வநிலைக்கு உயர்த்திக் கொள்கிறான்.
  • புலன்களின் ஆதிக்கத்தில் அடங்கி நடக்கும் வாழ்க்கை உலக சம்பந்தமானது. புலன்களை நம் ஆதிக்கத்தில் கொண்டுவந்து அடக்கி வாழும் வாழ்க்கை ஆன்மிக சம்பந்தமானது.

கருத்து தெரிவிக்க