முக்கிய செய்திகள்

ஷரியா பல்கலைக்கழகத்துக்கு அனுமதி இல்லை- பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு

பூனானையில் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும், ஷரியா பல்கலைக்கழகம் அல்லது மட்டக்களப்பு பல்கலைக்கழகம் என்ற பெயருள்ள பல்கலைக்கழகத்துக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மொஹான் டி சில்வா, இதனை தெரிவித்துள்ளார்.

இந்தப்பெயரைக்கொண்ட எந்த பல்கலைக்கழகமும் தமது ஆணைக்குழுவில் கல்வி நடவடிக்கைகளுக்கான அனுமதியைக் கோரவில்லை.

இலங்கையில் 15 பல்கலைக்கழகங்களையே மானியங்கள் ஆணைக்குழு ஒழுங்குப்படு;த்தி வைத்துள்ளது.

இந்தநிலையில் ஷரியா பல்கலைக்கழகத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று மொஹான் டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க