உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

‘மகாகவி பாரதியாரின்  97வது நினைவு’ தினம் வவுனியாவில் அனுஷ்டிப்பு! photos

மகாகவி பாரதியாரின்  97வது நினைவு தினம் இன்று காலை 8.30மணியளவில் வவுனியா குருமன்காடு பகுதியில் உள்ள அவரது உருவச் சிலை முன்பாக அனுஷ்டிக்கப்பட்டது.
வவுனியா நகரசபையின் செயலாளர் இ,தாயாபரன் தலைமயில் இடம்பெற்ற நிகழ்வில் பாரதியாரின் உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அவரது தமிழ் பற்று மற்றும்  சுதந்திர வேட்கை தொடர்பான கருத்துரைகளை தமிழருவி சிவகுமாரன்,தமிழ்மணி அகளங்கன் ஆகியோர் ஆற்றியிருந்தனர்.
இந்த நிகழ்வில் நகரசபை உறுப்பினர்களான நா.சேனாதிராசா,க.சந்திரகுலசிங்கம்,ரி.கே,ராஜலிங்கம், பா.பிரசன்னா, சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன், பொதுஅமைப்பினர், சமூக ஆர்வலர்கள்  அப் பகுதி வர்த்தகர்கள், எனப் பலரும் கலந்து கொண்டனர்.

கருத்து தெரிவிக்க