உள்நாட்டு செய்திகள்

நீர்கொழும்பு காவல்துறை ஊரடங்கு நீக்கப்பட்டது.

நீர்கொழும்பில் நேற்று இரவு முதல் பிறப்பிக்கப்பட்டிருந்த காவல்துறை ஊரடங்கு சட்டம் இன்று காலை 7 மணியுடன் நீக்கப்பட்டது.

எனினும் சமூக வலைத்தளங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தடை தொடர்கிறது.

முச்சக்கர வண்டி சாரதி ஒருவருக்கும் பாதசாரி ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகலே நேற்றைய வன்முறை சம்பவத்துக்கு காரணம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் சம்பவம் தொடர்பில் எவரும் கைதுசெய்யப்பட்டனரா? என்ற தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.

கருத்து தெரிவிக்க