உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

மட்டக்களப்பு தலைமையக பொலிசாரின் அரையாண்டு பரிசோதனைகள்!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்திற்கான அரை ஆண்டுக்கான ஆய்வு அறிக்கை பரிசோதனைகள் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு பிராந்திய பொலிஸ் பிரிவின் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களின் அரை ஆண்டுக்கான சீருடை மற்றும் அணிவகுப்பு பரிசோதனைகள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான வீதி அணிவகுப்பு ஆகியன ,மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தயா தீகா வதுற தலைமையில் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்றது

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம் என் எஸ் எம் .மெடிஸ் கலந்துகொண்டு பரிசோதனைகளை மேற்கொண்டார்

குறித்த அரை ஆண்டுக்கான அறிக்கை பரிசோதனை நிகழ்வில் மட்டக்களப்பில் முதல் முறையாக பாடசாலை மட்டத்தில் மாணவர்களுக்கிடையில் தன்னம்பிக்கை , ஒழுக்கம் போன்ற விடயங்களை மேம்படுத்தும் வகையில் பொலிஸ் மாணவ சிப்பாய் படை அணியினரால் பயிற்றுவிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களும் கலந்துகொண்டதுடன் அதில் தெரிவு செய்யப்பட மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வுகளில் நிகழ்வில் மட்டக்களப்பு பிராந்திய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் மட்டக்களப்பு பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் ,பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்டனர்.

கருத்து தெரிவிக்க