உள்நாட்டு செய்திகள்

‘சஜித்தை மைத்திரி ஆதரிக்கமாட்டார்’

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு  வழங்கமாட்டார் என தான் நம்புவதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச  தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் சஜித் பிரேமதாச  களமிறங்கினால் அவரையே சுதந்திரக்கட்சி ஆதரிக்கும் என வெளியாகியுள்ள தகவல்கள் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே மஹிந்த இவ்வாறு கூறினார்.

” ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக பலமானதொரு கூட்டணியை அமைப்பதில் ஜனாதிபதி உறுதியாக இருக்கிறார். எனவே, அவர் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒருபோதும் ஆதரவு வழங்கமாட்டார். ஆனால், ஜனாதிபதியின் மனதை மாற்றுவதற்கு சிலர் முற்படுகின்றனர்.” என்றும் மஹிந்த குறிப்பிட்டார்.

 

கருத்து தெரிவிக்க