உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

வரதராஜப்பெருமாளுக்கு எதிராக காணாமல் ஆக்கப்பட்டோர் போராட்டம்

காணாமல் ஆக்கப்பட்ட எவரும் உயிருடன் இல்லை என வவுனுpயாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.வவுனியாவில் கடந்த 930ஆவது நாட்களாக போராட்டம் மேற்கொண்டு வரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளே இப்போராட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தனர்.

வரதராஜப்பெருமாளின் முகம் பதிக்கப்பட்டு சித்திரிக்கப்பட்ட புகைப்படத்திற்கு விளக்குமாற்றால் அடித்து சாணத்தை கரைத்து ஊற்றியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் வெளியேறு வெளியேறு வரதரே ஒரிசாவிற்கு சென்றுவிடு என்றும் கோசங்களை எழுப்பியிருந்தனர்.இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் அமெரிக்க  ஜரோப்பிய ஒன்றியங்களின் கொடிகளுடன் தமிழர் ரத்தம் குடித்த ஒட்டுக்குழு வரதர் என்ற வாசகம் எழுதப்பட்ட பதாதை ஒன்றினையும் தாங்கியிருந்தனர்.

கருத்து தெரிவிக்க