உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

பயங்கரவாதிகளினால் அதிகம் பயன்படுத்தப்பட்ட ‘யூரியா நைட்ரேட்’

யூரியா நைட்ரேட் எனப்படும் சக்திவாய்ந்த வெடிபொருள் பயங்கரவாதிகளால் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

இது உயிர்த்த ஞாயிறு வெடிப்பிற்கு பயன்படுத்தப் பட்டுள்ளது என்று அரசாங்க ஆய்வாளர் கே.ஏ.வலியங்கே கூறியுள்ளார்.

யூரியா நைட்ரேட் ஒரு பாரிய அழிவை ஏற்படுத்தும் வெடிபொருள் ஆகும், இது இஸ்ரேலிய பயங்கரவாதிகளால் தொடர்ச்சியாக பயன்படுத்தப்படுகிறது.

இது பெப்ரவரி மாதம் 1993 இல் நியூயோர்க்கில் நடந்த முதல் உலக வர்த்தக மைய குண்டுவெடிப்பிலும் பயன்படுத்தப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளில் குண்டு வெடிப்பு தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

கொச்சிக்கடையில் உள்ள புனித அந்தனியார் ஆலயத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு தொடர்பான அறிக்கையை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிக்க எதிர்பார்க்கிறோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க