உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

கையொப்ப நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு ரணிலுக்கு அழுத்தம்

சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக களம் இறக்க கட்சி சார்பில் பெறப்படும் கையொப்ப நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு தாங்கள் நிர்பந்திக்க படுவதாக ஐக்கிய தேசிய கட்சியின் சில உறுப்பினர்கள் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

பிரதமர் மாலைதீவில் உத்தியோகபூர்வ விஜயத்தில் இருந்தபோது மேற்படி முறைப்பாடு அளித்ததாக அவர்கள் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த அமைச்சர்கள் கட்சியின் பிரதி தலைவர் பிரேமதாச ஜனாதிபதியாக வருவார் என்றும், பின்னர் அவர் தானாகவே கட்சியின் தலைவராக இருப்பார் என்றும் கூறியிருந்தார்கள்.

இந்நிலையில் அவ்வாறு கட்சி தலைவராக அவர் வரும் பட்சத்தில் தமக்கான வேட்பு மனு நிராகரிக்கப்படும் என தாம் மிரட்டப்படுவதாக முறைப்பாடு தெரிவித்துள்ள உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கருத்து தெரிவிக்க