உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

147 மாணவர்களுக்கு காலணிகள் வழங்கி வைப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட கரிப்பட்டமுறிப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்கள் 147  பேருக்கு காலணிகளை வழங்கி வைக்கப்பட்டுள்ளன
64 ஆவது படைப்பிரிவின் ஏற்பாட்டில் தொழிலதிபர் ஒருவருடைய நிதி பங்களிப்பின் கீழ் இந்த காலணிகள் வைக்கப்பட்டுள்ளது.
நேற்று(04) காலை பத்து முப்பது மணி அளவில் பாடசாலை முதல்வர் என் சர்வேஸ்வரன் சர்வேஸ்வரநாதன் அவர்களது தலைமையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் 64 ஆவது படைப்பிரிவின் ராணுவ பொறுப்பதிகாரி மேஜர் ஜெனரல் கீர்த்தி கொஸ்தா மற்றும் 643 ஆவது படைப்பிரிவின் படைத்தளபதி உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் கலந்துகொண்டு மாணவர்களுக்கான இந்த காலணிகளை வழங்கி வைத்தனர்.

கருத்து தெரிவிக்க