உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

சுகாதாரத் தெண்டர்கள் தமது நியமனங்களை வழங்கக்கோரி போராட்டம்

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த சுகாதாரத் தெண்டர்கள் தமது நியமனங்களை வழங்கக்கோரி சாவச்சேரி நகர சபை மண்டபத்திற்கு முன்பாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்ட களத்திற்குசென்ற பாராளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராசாமீது மண்ணெண்ணை ஊற்ற முற்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நீண்டகாலமாக பணியாற்றிய சுகாதாரத் தொண்டர்கள் தமக்கு நியமனங்களை வழங்குமாறு நீண்டகாலமாக போராடிவருகின்றனர்.

இந்நிலையில் சுகாதாரத் தொண்டர்களுக்கான நியமனத்தில் பலர் புறக்கணிப்புச் செய்யப்பட்டுள்ளமையினால் நேற்று தொடக்கம் வடக்கு மாகாண சபைக்கு முன்பாக இரவு இரவாக போராட்டத்தை முன்னெடுத்து வந்தனர்.

இந்நிலையில் இன்று சாவச்சேரி நகர சபை மண்டபத்திற்கு முன்பாக கூடிய போராட்டக் குழுவினர் தமக்கும் நியமனத்தை வழங்குமாறு போராட்டத்தில் ஈடுபட்டுனர்.

சம்பவ இடத்திற்குச் சென்ற தமிழரசுக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசாமீது ஆத்திரமடைந்தபோராட்டக் காரர்களில் சிலர் மண்ணெண்ணை ஊற்ற முற்பட்டுள்ளனால் இதனால் போராட்டக்களம் களேபரமானது.

கருத்து தெரிவிக்க