உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் கடன் வழங்கப்பட்டுள்ளது

என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் 55 ஆயிரம் தொழில்முயற்சிகளுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்காக 90 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

இம்முறை இந்த நிகழ்ச்சி யாழ்ப்பாணத்தில் நாளை மறுதினம் ஆரம்பமாகும்.

என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்டத்தின் மூன்றாவது கண்காட்சிக்கான ஏற்பாடுகளை நேரில் சென்று பார்வையிட்டதன் பின்னர் நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரட்ன கருத்து வெளியிட்டுள்ளார்.

இம்முறை கண்காட்சியின் மூலம் பத்தாயிரம் தொழில்முயற்சியாளர்களை உருவாக்க எதிர்ப்பார்த்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

கருத்து தெரிவிக்க