உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்குப் பொருத்தமான தினம் நவம்பர் 15- மஹிந்த

ஜனாதிபதித் தேர்தலை நவம்பர் மாதம் 15ம் திகதி நடத்துவதே மிகவும் பொருத்தம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தலை நடத்துவதற்கான உத்தேசத்தை அரசாங்கம் பிரஸ்தாபித்ததும் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு தமது ஆணைக்குழு பணியாளர்கள் தயார் நிலையில் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,. தேர்தல் சட்டத்தின் பிரகாரம், ஜனாதிபதித் தேர்தலை ஆகவும் முன்கூட்டியே நடத்தக்கூடிய நாள் நவம்பர் 10ஆம் திகதியாகும்.

நவம்பர் 15ஆம் திகதி இலகுவான தினம். டிசம்பர் 9ஆம் திகதி ஆகவும் பிந்திய நாளாகும்.

வேட்பு மனுக்களை ஏற்பது பற்றி தேர்தல் ஆணைக்குழு விரைவில் அறிவித்தலை வெளியிடும் என குறிப்பிட்டார்.

கருத்து தெரிவிக்க