உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

ஜனாதிபதி வேட்பாளர் யார்? அலரிமாளிகையில் நாளை முக்கிய பேச்சு!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுக்குமிடையிலான முக்கியத்துவமிக்க சந்திப்பு (05) நாளை மாலை அலரிமாளிகையில் நடைபெறவுள்ளது.

புதிய அரசியல் கூட்டணியை அறிவிக்கும் திகதி மற்றும் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை இறுதிப்படுத்துவதற்காகவே இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய தேசியக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யாரை என்பதை மாலைதீவு பயணத்தின் பின்னர் பிரதமர் அறிவிப்பார் என அவருக்கு சார்பான அமைச்சர்கள் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தவிர்க்கமுடியாத காரணத்தினால் நாளை இச்சந்திப்பு இடம்பெறாத பட்சத்தில் நாளை மறுதினம் (06) கட்டாயம் நடைபெறும் என சிறிகொத்த வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

 

 

கருத்து தெரிவிக்க