உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை தீர்க்க கூடியவருக்கே ஆதரவு வழங்கப்படும்

சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை துணிகரனமாக தீர்க்க கூடிய அதிகாரம் படைத்த வேட்பாளருக்கே ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு வழங்கப்படும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

02.09.2019 அன்று திங்கட்கிழமை கொட்டகலை சீ. எல். எப். கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஜனாதிபதி தேர்தல் குறித்து இன்னும் திகதிகள் அறிவிக்கப்படவில்லை. ஆகையால் அதற்கு முன்னர் நாம் அவசரபட தேவையில்லை. திகதி மற்றும் வேட்பு மனு தாக்கல் செய்த பின் இது குறித்து முடிவு எடுப்போம்.

நாங்கள் 32 அம்ச கோரிக்கைகளை முன் வைத்துள்ளோம். எல்லா கட்சிகளிலும் ஜனாதிபதி வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தபட்ட பின்பு எங்களுடைய 32 அம்ச கோரிக்கைகளையும் அவர்களுடைய கவனத்திற்கு கொண்டு செல்வோம்.

அந்த கோரிக்கைகளை யார் ஏற்கின்றார்களோ அவர்களுக்கு நாம் ஆதரவினை வழங்குவோம் என்றார்.

கருத்து தெரிவிக்க