பொன்மொழிகள்

சிந்தனை, எண்ணம்! – விவேகானந்தர்

  • அனைத்து ஆற்றல்களும் நம் உள்ளே இருக்கின்றன. நமது முக்தியும் ஏற்கனவே நம்முள் இருக்கிறது. ஆன்மா சுருங்கியுள்ளது அல்லது மாயையாகிய திரையால் மறைக்கப்பட்டிருக்கிறது என்று எப்படி வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள், கருத்து இதுதான். மிகத் தாழ்ந்தவர் முதல் அனைவரிடமும் புத்தர் ஆவதற்கான வாய்ப்பு இருக்கிறது.
  • நமது தகுதிக்கு ஏற்றதையே நாம் பெறுகிறோம். உலகம் கெட்டது, நாம் நல்லவர்கள் என்று சொன்னால் அது பொய். அப்படி ஒருபோதும் இருக்க முடியாது. அது நமக்கே நாம் சொல்லிக் கொள்ளும் ஒரு பெரும் பொய்.
  • கற்றுக்கொள்ள வேண்டிய முதற்பாடம் இதுவே. வெளியிலுள்ள எதையும் சபிக்காமலும் வெளியிலுள்ள ஒருவர் மீதும் பழி சுமத்தாமலும் இருக்கத் தீர்மானியுங்கள். மனிதனாக இருங்கள். எழுந்து நில்லுங்கள். பழியை உங்கள் மீதே சுமத்திக் கொள்ளுங்கள். எப்போதும் அதுவே உண்மை என்பதை அப்போது காண்பீர்கள். உங்களையே வசப்படுத்திக் கொள்ளுங்கள்.

கருத்து தெரிவிக்க