உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

மகிந்த, மைத்திரி மற்றும் கோத்தா சந்திக்க திட்டம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவும், பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவும், அடுத்தவாரம் சிறப்பு கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளனர்.

வரவிருக்கும் அதிபர் தேர்தல் மற்றும் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பான சில தீர்க்கமான விடயங்கள் குறித்து இந்தச் சந்திப்பின் போது, விவாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும், சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையே நடைபெறும் பேச்சுக்களின் முன்னேற்றம் குறித்தும் கவனம் செலுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.

கருத்து தெரிவிக்க