உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

‘சஜித்தே ஜனாதிபதியாக வரவேண்டும்’ வவுனியாவில் பிரார்தனை!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வீடமைப்பு நிர்மாண அமைச்சரான சஜித் பிரேமதாச அவர்கள் ஜனாதிபதி வேட்பாளாராக அறிவிக்கபடுவதுடன், அவரே ஜனாதிபதியாக தெரிவுசெய்யபடவேண்டும் என்று தெரிவித்து நாடாளாவிய ரீதியாக உள்ள மதஸ்தலங்களில் இன்றையதினம் விசேட பூஜை வழிபாடுகள் மேற்கொள்ளபட்டிருந்தது.
அதற்கமைய வவுனியாவில் அமைந்துள்ள மத ஸ்தலங்களிலும் குறித்த வழிபாடுகள் மாலை 5.30 நேற்று மாலை 05.30 மணியளவில் மேற்கொள்ளபட்டது.
அந்தவகையில் குடியிருப்பு பிள்ளையார் ஆலயம், சூசைப்பிள்ளையார்குளம் சகாயமாதாஆலயம், கண்டிவீதியில் அமைந்துள்ள பௌத்தவிகாரை ஆகியவற்றில் சரியாக மாலை 5.30 மணியளவில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
குறித்த நிகழ்வுகளில் ஜக்கிய தேசியகட்சியின் வவுனியா மாவட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

கருத்து தெரிவிக்க