உள்நாட்டு செய்திகள்புதியவை

நாளை தெரிவிக்குழு உறுப்பினர்களின் விசேட கலந்துரையாடல்!

நாடாளுமன்ற தெரிவிக்குழுவின் உறுப்பினர்களின் விசேட கலந்துரையாடல் நாளை இடம்பெறவுள்ளது என குழுவின் தலைவர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

பிற்பகல் 3 மணியளவில் இடம்பெறவுள்ள இந்த கலந்துரையாடலில் விசாரணை தொடர்பான இறுதி அறிக்கைகளுக்கான ஆலோசனைகள் பெறப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தெரிவிக்குழுவினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பிவைக்கப்பட்ட எழுத்துமூல கோரிக்கைக்கு இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை, அது தொடர்பில் அறிவிக்கப்படும் பட்சத்தில் விரைந்து இறுதி அறிக்கை தயாரிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக பிரதி சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க