உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

கேரள கஞ்சாவுடன் நபரொருவர் இரத்தினபுரியில் கைது

கேரள கஞ்சா வைத்திருந்த ஒருவர் இரத்தினபுரி- கோலுவாவில பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கஹவத்த பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்த 3 கிலோ கஞ்சா பொதிகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர் இரத்தினபுரி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

 

கருத்து தெரிவிக்க