உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

நாட்டுக்கு ஆசி வேண்டி பொலிஸாரினால் மட்டக்களப்பில் விசேட பூசை வழிபாடுகள்

மட்டக்களப்பு கோட்டமுனை ஸ்ரீ வீரகத்திப்பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழாவை முன்னிட்டு மட்டு. தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி தயா தீகா வதுற ஆலோசனைக்கு அமைய மட்டக்களப்பு பொலிஸ் திணைக்களத்தின் ஏற்பாட்டில் விசேட பூஜை நடைபெற்றது .

கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் சில பகுதியில் இடம்,பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து நாட்டில் நிலவி வந்த பதட்டமான சூழ் நிலை தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது.

இந்த நிலையில் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நல்லாசியும் ,இனங்களுக்கிடையில் நல்லிணக்கமும் ஏற்பட நல்லாசி வேண்டி குறித்த பூஜை ஏற்படுசெயய்யப்பட்டிருந்தது.

இந்த சிறப்பு ஸ்ரீ வீரகத்திப்பிள்ளையார் ஆலய பிரதம குரு சிவப்பிரம ஸ்ரீ சரவண காசிபதிஸ்வரக்குருக்கள் தலைமையில் நடைபெற்ற விசேட பூஜை வழிப்பாட்டு நிகழ்வில் மட்டக்களப்பு பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் எல் ஆர் குமாரசிறி ,உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கருத்து தெரிவிக்க