உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

கழிவு தேயிலை ஏற்றிச்சென்ற இருவர் கைது

6,480 கிலோ கிராம் கழிவுத் தேயிலை தொகை ஒன்றை கடத்திச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நிட்டம்புவ பொலிஸாரால் இரண்டு பாரவூர்திகள் நிறுத்தப்பட்டு சோதனையிடப்பட்ட போது குறித்த கழிவுத் தேயிலைத் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் கலஹா மற்றும் முருதகஹமுல பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் இன்று முற்படுத்தப்படவுள்ளனர்.

கருத்து தெரிவிக்க