பொன்மொழிகள்

முதலில் நோக்கத்தை தீர்மானி! – விவேகானந்தர்

நோக்கம் எதுவென்பதை முதலில் தீர்மானி. அதுவே இலக்கு என்பதை உறுதி செய்துகொள். பின்னர், நேர்மையுடன் நில், தைரியமாக இரு. சற்றும் பிறழாத நீதிமானவனாக  இரு. தோல்வி கண்ட போதும் துவளாமல் இருங்கள். தோல்விகளைப் பொருட்படுத்தாதீர்கள். ஏனென்றால், தோல்விகள் இயற்கையானவை. வாழ்க்கைக்கு அழகு சேர்ப்பவை. அதுபோல், மலை போன்ற சகிப்புத்தன்மை, இடை விடாத முயற்சி, எல்லையற்ற நம்பிக்கை இவைதாம் நற்காரியத்தில் வெற்றி தரும்.

கருத்து தெரிவிக்க