உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஐ.தே.கவினர் ஒற்றுமையாக செயற்பட தீர்மானம்!

ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கருத்து வேறுபாடுகள் இன்றி ஒற்றுமையாக செயற்பட இணங்கியுள்ளனர் என்று கல்வி அமைச்சர் அகிலவிராஜ் கரியவசம் நேற்று (ஆகஸ்ட் 30) தெரிவித்தார்.

“மாறுபட்ட அறிக்கைகளை வெளியிடாமல், தேவையற்ற பேரணிகளை ஏற்பாடு செய்யாது கட்சியின் ஒற்றுமையைப் பாதுகாக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்” என்று கட்சியின் தலைவர் பிரதமர் ரனில் விக்கிரமசிங்க உடனான சந்திப்பைத் தொடர்ந்து அவர் கூறினார்.

கூட்டத்தில் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

அமைச்சர் சஜித் பிரேமதாச பிரதமரை தனியாக சந்தித்து, கலந்துரையாடினார்.  இந்த சந்திப்பில் வேறு எவரும் கலந்துகொள்ளவில்லை என அவர்
மேலும் கூறினார்.

கருத்து தெரிவிக்க