உள்நாட்டு செய்திகள்புதியவை

கண்டபெரி பேராயர் ஜனாதிபதிக்கு பாராட்டு

நாட்டின் மதத் தலைவர்களின் சிறப்புரிமையை பாதுகாக்க ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கொண்ட முயற்சிகளை கண்டபெரி பேராயர் ஜஸ்டின் ஆண்டகை பாராட்டியுள்ளார் என்று ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது, அனைத்து மதத் தலைவர்களிடையே பரஸ்பர நம்பிக்கையையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த ஜனாதிபதி மேற்கொண்ட முயற்சிகளை பேராயர் ஜஸ்டின் வெல்பெ பாராட்டியுள்ளார்.

பெரியாரின் வருகை சுற்றுலா தலமாக விளங்கும் இலங்கை போன்ற நாட்டுக்கு பெரும் ஆசீர்வாதம் ஆகும் என ஜனாதிபதி இதன் பொது குறிப்பிட்டுள்ளார்.

கலந்துரையாடலைத் தொடர்ந்து ஜனாதிபதியும் அவரது எமினென்ஸ் வெல்பியும் நினைவு பரிசுகளை பரிமாறிக்கொண்டனர் என்று ஜனாதிபதி அலுவலக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க