உள்நாட்டு செய்திகள்புதியவை

தமிழ் குடும்பத்தை நள்ளிரவில் நாடுகடத்தும் முயற்சி தடுக்கப்பட்டது

புகலிடம் கோரும் தமிழ் குடும்பத்தை நள்ளிரவில் நாடுகடத்துவதை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆர்வலர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிய நிலையில் அவை நிராகரிக்கப்பட்டு நாடு கடத்தும் அபாயத்தை எதிர்நோக்கி இருந்த நடேசலிங்கம் பிரியா தம்பதியர் மற்றும் அவர்களது இரண்டு பிள்ளைகளையும் நாடுகடத்தும் முயற்சி இறுதி நேரத்தில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

குறித்த நால்வரும் நாடு கடத்தும் நோக்கில் நேற்று மெல்பெரில் விமானத்தில் ஏற்றப்பட்டனர். இந்நிலையில் நாடுகடத்துவதற்கு எதிரான அவர்களது மனு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்வதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது.

இதனால் அவர்களாலும் தற்காலிகமாக அவுஸ்திரேலியாவில் தங்கி இருக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

எவ்வாறெனினும் குடிவரவு அதிகாரிகளால் குறித்த குடும்பத்தின் புகலிட கோரிக்கை விரிவாக ஆராயப்பட்டு நிராகரிக்கப்பட்டமையால் இவர்களுக்கு தொடர்ச்சியாக அவுஸ்திரேலியாவில் வசிக்கும் வாய்ப்பு ஏற்படும் என தெரிவிக்க முடியாது என குறிப்பிடப்படுகின்றது.

கருத்து தெரிவிக்க