உள்நாட்டு செய்திகள்

உயிர்த்த ஞாயிறில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சீனாவின் நிதியுதவி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சீனா, நிதியுதவிகளை வழங்கவுள்ளது.

சீனாவின் தூதுவர் செங் செகுயுவான் இதற்காக 17.84 மில்லியன் ரூபாய்களுக்கான காசோலையை இன்று இலங்கை செஞ்சிலுவை சங்கத்திடம் கையளித்தார்.

இந்த நிதி, தாக்குதலில் பாதிக்கப்பட்டு காயமடைந்தவர்களுக்காக பயன்படுத்தப்படவுள்ளது.

நிகழ்வின்போது உரையாற்றிய சீனத் தூதுவர், இலங்கை விடுக்கும் அவசர உதவிகளுக்கு தமது நாடு உதவத்தயாராகவே உள்ளதாக குறிப்பிட்டார்.

கருத்து தெரிவிக்க