உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு; ஒருவர் காயம்!

திருகோணமலை புல்மோட்டையில் நேற்று இரவு மீன்பிடி நடவடிக்கையில்
ஈடுபட்டுக்கொண்டிருந்த மீனவர்கள் மீது கடற்படையினரால் துப்பாக்கி சூட்டை மேற்கொண்டிருந்தனர்.

மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் புல்மோட்டையை சேர்ந்த மெளசூக் இம்ரான் வயது 23 என்பவருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது.

நேற்று இரவு புல்மோட்டையில் கடற்தொழிலுக்கு சென்ற நான்கு மீனவர்களில் ஒருவருக்கே இது நிகழ்ந்துள்ளதுடன் மற்றைய மூவருக்கும் அடிகாயங்கள் காணப்படுகின்றன.

மேலும் காயம் பட்ட மீனவர்களில் துப்பாக்கிச்சூட்டுக்கு இழக்கானவரின் காயத்திற்கு
மருந்திட்டு அவரையும் மற்றைய மூவரையும் குச்சவெளி பொலிஸாரிடம்
ஒப்படைத்தள்ளனர்.

ஒப்படைக்கப்பட்ட நால்வரு பிற்பகல் மூன்று மணியளவில் குச்சவெளி வைத்திய சாலையில் மேலதிக சிகிச்சைக்காக குச்சவெளி பொலிஸாரால் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க