உள்நாட்டு செய்திகள்புதியவை

பிணை முறி மோசடி தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்க ரவிக்கு உத்தரவு

பிணை முறி மோசடி வழக்கு தொடர்பாக அடுத்த இரண்டு வாரங்களுக்குள் குற்றவியல் புலனாய்வுத் துறைக்கு (சிஐடி) அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் அமைச்சர் ரவி கருணநாயக்கவுக்கு உத்தரவிட்டுள்ளது.

ரவி கருணநாயக்க 2015 ஆம் ஆண்டில் பிணை முறி ஊழல் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைகுழு முன் தவறான ஆதாரங்களை வழங்கியதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக அவரிடமிருந்து கூடுதல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட வேண்டும் என்று கூறி சட்டமா அதிபர் நீதிமன்ற உத்தரவை கோரியிருந்தார்.

இந்நிலையிலேயே நீதிமன்றம் அது தொடர்பிலான அறிக்கையை கோரியுள்ளது

கருத்து தெரிவிக்க