உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

ஐஸ் ரக போதை பொருளுடன் நபரொருவர் வெள்ளவத்தையில் கைது

வெள்ளவத்தை – ருத்திரா மாவத்தை பிரதேசத்தில் ஐஸ் ரக போதை வைத்திருந்த நபரொருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து 2 கிலோ கிராம் ஐஸ் ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபர் கொழும்பு 15 ,மோதர பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடைய நவரென தெரியவந்துள்ளது.

குறித்த சந்தேக நபர் இன்று [ 29.8.2019] கல்கிஸ்ஸை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க