உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

ஐ. தே. கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அடுத்த வாரத்தில் அறிவிக்கப்படுவார் – சுஜீவ

அடுத்த ஒன்றரை வாரங்களுக்குள் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் முடிவு செய்யப்படுவார் என்று அமைச்சர் சுஜீவ சேனாசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று (28) நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

ஐ.தே. கட்சியின் துணைத் தலைவர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் அமைச்சர்கள் குழு ஒன்று, கொழும்பில் உள்ள நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் இல்லத்தில் கலந்துரையாடினர்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக கலந்துரையாடல்கள் நடைபெற்றுவந்ததாக சுட்டிக்காட்டியுள்ளார்.

கலந்துரையாடலின் பின் நிதியமைச்சர் மங்கள சமரவீரரின் வீட்டில் இரவு உணவு விருந்துபசாரம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க