உள்நாட்டு செய்திகள்

பாடசாலைகள் ஆரம்பம் குறித்து புதிய அறிவிப்பு

இலங்கையில் அரச பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் இரண்டாம் தவணைக்காக திறக்கப்படவுள்ளன.

எனினும் அன்றைய தினம், 6ஆம் வகுப்பில் இருந்து 13ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் மாத்திரம் பாடசாலைகளுக்கு வருகைத்தருமாறு கல்வி அமைச்சு கேட்டுள்ளது.

முதலாம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மே 13ஆம் திகதியே பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

மாணவர்களின் பாதுகாப்பு நலன்கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க