உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்கக்கோரும் ஐ.தே,க

தமது இயலாமையை மறைக்கும் முகமாக நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்கும் கோரிக்கையை ஐக்கிய தேசியக்கட்சி முன்வைக்கவுள்ளது.

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த் இதனை இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்குமாறு ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதியிடம் கோருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது ஜனாதிபதி தேர்தல் ஒன்றுக்கு செல்லமுடியாத தமது இயலாமையை மறைக்கவும் ஜனாதிபதி தேர்தலை பிற்போடவும் ஐக்கிய தேசியக்கட்சி மேற்கொள்ளும் நடவடிக்கை என்று அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

கருத்து தெரிவிக்க