உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

குருளுகல வனப்பகுதியில் தீ

வெல்லவாய- குருளுகல வனப்பகுதியில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

இன்று காலை குறித்த வனப்பகுதியில் தீ பரவத் தொடங்கியதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் மொனராகலை மாவட்ட உதவி பணிப்பாளர் ரவீந்திரகுமார தெரிவித்தார்.

தீயணைப்பு நடவடிக்கையில் இடர் முகாமைத்துவ நிலையத்தின் ஊழியர்களுடன் இராணுவத்தினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மொனராகலை மாவட்டத்தில் நிலவும் வறட்சியுடனான காலநிலையினால் காடுகளில் தீ பரவல் அதிகரித்துள்ளது.

கடந்த வாரத்தில் மொனராகலை மாவட்டத்தின் பல பகுதிகளில் தீ பரவல் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க