உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

வீடொன்றிலிருந்து 8 வயது சிறுவன்,19 வயது யுவதி ஆகியோர் சடலமாக மீட்பு

வென்னப்புவ வாய்க்கால் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

8 வயது சிறுவன் மற்றும் 19 வயது யுவதி ஆகியோரின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டதாக தெரியவருகிறது.

இவர்கள் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த நபர்களின் வீட்டிலிருந்து வெளியேறும் நீர் எதிரேயுள்ள வீடொன்றின் வளவுக்குள் வருவதால் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே இக்கொலைக்கு காரணமென தெரியவந்துள்ளது.

குறித்த இருவரையும் கொலைசெய்த சந்தேகநபர் பொலிஸில் ஆஜராகியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க