உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

ஹெரோயினுடன் மூவர் கைது

திருகோணமலை நேற்று மாலை திருமலை நகரில் நீதிமன்ற வீதியில் 70 மில்லிகிராம்
ஹெரோயினுடன் மூவரை தாம் கைது செய்ததாக திருகோணமலை மாவட்ட பிராந்தி
போதை பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் முறையே 23,24,27 வயதுடையவர்கள் என அவர்கள் தெனிவித்தனர்.

கைதுசெய்யப்பட்டவர்களில் 27 வயதுடைய நபர் சில கொள்ளைச் சம்பவங்களில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்துள்ளது.

குறிப்பாக வவுனியா மாவட்டத்தில் இடம்பெற்ற கொள்ளை சம்பவத்தின் தேடப்படும் சந்தேகநபர் என்ற விசாரணைகளின்போது தெரியவந்தாக அவர்கள் தெரிவித்தனர்.

கைசெய்யப்பட்டவர்கள் போதைப்பொருளை பாவிக்கமுட்படும் போதே அவர்களை கைது
செய்யமுடிந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்டவர்களையும் கைப்பற்றப்பட்ட ஹெரோயினையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த திருகோணமலை தலைமை பொலிஸ் காரியாலய பொலிஸாரிடம் இன்று ஒப்படக்கப்பட்டதாக திருகோணமலை பிராந்திய போதை பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

[நிருபர் அலியார் மொஹமட் கீத்]

கருத்து தெரிவிக்க