விளையாட்டு செய்திகள்

“ஹர்திக் பாண்ட்யா” சிறப்பாக விளையாடுவார்- யுவராஜ் சிங்

உலக கிண்ணக் கிரிக்கட்டில் இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யா சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்ப்பார்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய வீரர் யுவராஜ் சிங் இந்த எதிர்ப்பார்ப்பை வெளியிட்டுள்ளார்.

உலகக்கிண்ண கிரிக்கட் போட்டிகள் எதிர்வரும் 30ஆம் திகதி இங்கிலாந்தில் ஆரம்பமாகின்றன.

இதற்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யா சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிகளில் அவர் சிறப்பாக விளையாடுகிறார்.

இந்த மதிப்பீடுகளை வைத்துக்கொண்டே யுவராஜ், தமது எதிர்ப்பார்ப்பை வெளியிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க