உள்நாட்டு செய்திகள்புதியவை

‘அவசரக் காலச் சட்ட நீக்கம் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையாது’

அவசரக் காலச் சட்டம் நீக்கப்பட்டமை தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையாது என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்தார்.

தொம்பே பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டார்.

முப்படையினரின் ஆலோசனைகளுக்கு அமையவே நடைமுறையில் இருந்த அவசரகால சட்டம் நீக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

இதேவேளை தேசிய பாதுகாப்பு தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க