உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

மத்திய குழுக் கூட்டத்தைக் கூட்டுவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தீர்மானம்

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்னர், கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தைக் கூட்டுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, நாளை மாலை 6.00 மணிக்கு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி தலைமையில் மத்திய குழுக் கூட்டம் இடம்பெறவுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தை நடத்துவதற்கு, இரு தரப்பினரும் இணங்கியுள்ளனர்.

இதற்கமைய, சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி, அதன் நாடாளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர, மஹிந்த அமரவீர, திலங்க சுமதிபால மற்றும் முன்னாள் செயலாளர் ரோஹண லக்ஷ்மன் பியதாஸ ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் சார்பில், அதன் தவிசாளான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களான டளஸ் அலகப்பெரும உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளனர்.

கருத்து தெரிவிக்க