உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

கஞ்சாவுடன் நபரொருவர் கைது

தளங்கம – தலவத்துகொட பிரதேசத்தில் வைத்து கஞ்சாவுடன் நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடமிருந்து ஒன்பது கிலோகிராம் மற்றும் 45 கிராம் கஞ்சாவை பொலிஸார் மீட்டுள்ளனர்.

40 வயதான சந்தேகநபர் கடுவலை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

 

கருத்து தெரிவிக்க