உள்நாட்டு செய்திகள்

“ மத்ரஸா” நிலையங்கள் ஒழுங்குப்படுத்தப்படவேண்டும்- பிரதமர் பணிப்புரை

இஸ்லாமிய “மத்ரஸா” கல்வி நிலையங்கள் ஒழுங்குமுறைப்படுத்தப்படவேண்டும் என்று பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார்.

முஸ்லிம் விவகாரத்துறை அமைச்சுக்கு இந்தப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது எழுந்து முரண்பாடுகள் மிக்க கருத்துக்களை தடுக்கவேண்டுமெனில் இந்த மதரஸாக்கள் ஒழுங்குப்படுத்தப்படவேண்டியது அவசியம் என்று பிரதமர் வலியுறுத்தியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

“மத்ரஸா”க்களே தீவிரவாதத்தை கற்பிப்பதாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருகின்றன.

கருத்து தெரிவிக்க