உள்நாட்டு செய்திகள்

சரத் பொன்சேகாவை சட்டம் ஒழுங்கு அமைச்சராக நியமிக்கக் கோரிக்கை

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை, சட்டம் மற்றும் ஒழுங்குத்துறை அமைச்சராக நியமிக்கவேண்டும் என்று ஐக்கியதேசியக்கட்சி கோரவுள்ளது.

ஐக்கிய தேசியக்கட்சியின் 59 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தக்கோரிக்கையை ஜனாதிபதியிடம் முன்வைக்கவுள்ளனர்

இவர்களின் கோரிக்கை, எதிர்வரும் திங்கட்கிழமையன்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் இன்று பாதுகாப்பு முக்கிய பிரச்சனையாக மாறியுள்ளது.

இந்தநிலையில், அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்களில் சரத் பொன்சேகா மாத்திரமே அதற்கு காத்திரமானவராக இருப்பார் என்று ஐக்கியதேசியக்கட்சியினர் தமது கோரிக்கை கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே இந்த பதவிக்கு சரத் பொன்சேகா நியமிக்கப்படுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டபோதும் அது இடம்பெறவில்லை.

கருத்து தெரிவிக்க