சினிமா

இயக்குனர் ஜோஷி மீது பெண் எழுத்தாளர் குற்றச்சாட்டு!

மலையாள சினிமாவில் ஆக்சன் படங்களின் பிதாமகன் என அழைக்கப்படுபவர் இயக்குனர் ஜோஷி. முன்னணி நடிகர்களை வைத்து மட்டுமே பல வருடங்களாக படம் இயக்கி வந்தவர் ஜோஷி.
இந்த நிலையில் மலையாள குணச்சித்திர நடிகர்கள் ஜோஜூ ஜார்ஜ், கோலிசோடா-2வில் வில்லனாக நடித்த செம்பான் வினோத் மற்றும் நடிகை நைலா உஷா ஆகியோரை வைத்து ‘பொரிஞ்சு மரியம் ஜோஸ்’ என்கிற படத்தை இயக்கியுள்ளார். இப்படம் வெளியாகி இருக்கிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் கதையை தான் எழுதியது என்று மலையாள பெண் எழுத்தாளர் லிசி ஜாய் என்பவர் குற்றம் சாட்டியுள்ளார். படம் உருவாவதற்கு முன்பாக தயாரிப்பாளர் ஒருவர் படத்திற்கு கதை எழுதி தருமாறு கேட்டுக் கொண்டாதாகவும் தயாரிப்பாளர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அந்த படம் அப்படியே கிடப்பில் போடப்பட்டதாகவும் கூறியுள்ளார் லிசி ஜாய்.
தற்போது அதே கதை தான் ஜோஷி இயக்கத்தில் ‘பொரிஞ்சு மரியம் ஜோஸ்’ என்கிற பெயரில் வெளியாக இருக்கிறது என்றும், இதுபற்றி இயக்குனர் ஜோஷியிடம் முறையிட்டும் அவர் அதை கண்டு கொள்ளவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க