உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

இலங்கை வழியாக தமிழகத்திற்குள் நுழைந்த பயங்கரவாதிகள்!

இலங்கை வழியாக லஷ்கர்-இ-தைபா Lashkar-e-Taiba (LeT) அமைப்பைச் சேர்நத 6 பயங்கரவாதிகள் தமிழ்நாட்டிற்குள் ஊடுருவியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்த்துள்ளது.

இதனையடுத்து மாநிலம் முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் 6 பேர் இலங்கை வழியே தமிழகத்திற்குள் ஊடுருவியிருப்பதாகவும், இலங்கையைப் போன்று தமிழகத்திலும் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட திட்டமிட்டிருப்பதாகவும் தமிழக டிஜிபி திரிபாதிக்கு மத்திய உளவுத்துறை தகவல் அளித்துள்ளது.

இந்த குழுவில் ஒரு பாகிஸ்தானியர் மற்றும் ஐந்து இலங்கை தமிழர்கள் இருப்பதாகவும் இந்திய ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தும்படி அனைத்து மாவட்ட எஸ்.பி.க்கள் மற்றும் பொலிஸ் ஆணையாளர்களுக்கு டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும்.

மேலும் கடலோர பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான படகுகளை கண்காணிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

கோவில்கள், தேவாலயங்கள், பொது இடங்கள் மற்றும் பள்ளிவாசல்களில் பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அங்கு வரும் வாகனங்களும் சோதனை செய்யப்படுகின்றன.

இதேபோல் கடலோர பகுதிகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

சந்தேகத்திற்குரிய நபர்களோ, படகுகளோ தென்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க