உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ 7வது தொடர் இன்று யாழில் ஆரம்பம்!

‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ நிகழ்ச்சித்திட்டத்தின் ஏழாவது நிகழ்ச்சித்திட்டம் யாழ் மாவட்டத்தை மையப்படுத்தி இன்று (23) ஆரம்பமாகின்றது.

ஜனாதிபதி அவர்களின் வழிகாட்டலில் ஜனாதிபதி அலுவலகத்தினால் பொதுமக்கள் நலன்பேணலுக்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ நிகழ்ச்சித்திட்டம் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

ஜனாதிபதி அலுவலகம், அமைச்சுக்கள், மாகாண சபைகள் மற்றும் தனியார் துறையுடன் இணைந்து நடைமுறைப்படுத்தப்படும் நிகழ்ச்சித்திட்டங்கள் இன்று 23 முதல் எதிர்வரும் 29ஆம் திகதி வரையில் யாழ் மாவட்டத்தில் அனைத்து பிரதேச செயலக பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதன் முன்னேற்ற மீளாய்வும் இறுதி நிகழ்வும் ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதி ஜனாதிபதி அவர்களின் தலைமையில் இடம்பெறும்.

கருத்து தெரிவிக்க