உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

சுற்றிவளைப்பில் உள்நாட்டு துப்பாக்கிகளுடன் 5 பேர் கைது

சூரியவௌ – சுதுகல, மவ்ஹார பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் உள்நாட்டு துப்பாக்கிகளுடன் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் அலுத்வெல வீதி ஹம்பகமுவ பகுதியை சேர்ந்த 35 முதல் 56 வயதுகளுக்கு இடைப்பட்டவர்கள் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மிருக வேட்டைக்காக குறித்த துப்பாக்கிகளை வைத்திருந்திருக்கக் கூடுமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் வெல்லவாய நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ள நிலையில், சூரியவௌ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க