வவுனியா நகரில் உள்ள வவுனியாகுளத்தில் மீன்கள் இறந்து மிதக்கின்றமையால் அப்பகுதியில் சுகாதார பிரச்சனை எழுந்துள்ளது.
வவுனியாயில் கடந்த சில மாதங்களாக நிலவிய வரட்சி காரணமாக வவுனியா குளத்தின் நீர்மட்டம் சடுதியாக குறைவடைந்து குளத்தின் பெரும் பகுதி உலர்ந்து காணப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த நீர்ப்பகுதியில் மீன்கள் இறந்து நீரில் மிதக்கின்றன. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார பிரச்சனையும், சுவாசம் சம்மந்தமான பிரச்சனைகளும் எழுந்துள்ளதுஎன அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்
கருத்து தெரிவிக்க