உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

தமிழ் மக்களின் வாக்குகள் என்றைக்குமே கோட்டாபயவுக்கு கிடைக்காது

தற்போது நாட்டில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான விடயம் பேசு பொருளாக உள்ளது.

சில கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் பெரமுன கட்சிகள் சார்பாக முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ச அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஆனால் தமிழ் மக்களின் வாக்குகள் என்றைக்குமே கோத்தாவுக்கு கிடைக்காது. என சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் இதை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவித்ததாவது,

முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ச போர்க் குற்றச்சாட்டுக்கு உள்ளகியிருப்பவர் அதற்கும் மேலதிகமாக அவர் சட்டங்களை மதிக்கும் நபர் இல்லை இராணுவத்தினர் வசம் உள்ள காணிகளை விடுவிப்பதில் சாதக தன்மை அற்றவர் இவ்வாறான ஒருவரை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள விரும்ப மாட்டார்கள் என்றார் சுரேஷ் பிரேமச்சந்திரன்

கருத்து தெரிவிக்க