உள்நாட்டு செய்திகள்புதியவை

நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் பதவிகாலம் மேலும் நீடிப்பு

நாடாளுமன்ற தெரிவுக் குழுவின் பதவிகாலத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கு நாடாளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது।

கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக்குண்டு தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவின் பதவிக் காலத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கு பாராளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது।

அந்த வகையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை குறித்த தெரிவுக்குழுவின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது।

கருத்து தெரிவிக்க