உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

4 வாகனங்கள் தீக்கிரையான சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது

நீர்க்கொழும்பு பகுதியில் 4 வாகனங்கள் தீக்கிரையான சம்பவம் தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை 02.00 மணியளவில் இவ்வாறு வாகனங்கள் தீப்பற்றி எரிவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டவர் மதுபோதையில் இருந்ததால் அவர் குறித்த வாகனங்களை தீ மூட்டியிருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

நீர்க்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க